Monday, January 29, 2007

சாய்பாபாவின் விபூதி மாயாஜாலம்! - ஒரு பகீர்

ஒரு வாரமா புதுப்பேடடை தனுஷ் மாதிரி, "எங்க ஏரியா உள்ள வராத..."ன்னு கத்தி பாடணும் போல இருக்கு, காரணம், இந்த சாய்பாபா தான்!

ஏதோ யாகம் பண்றேன்னு, திருவான்மியூர் ஏரியாவையே ஆக்ரமிச்சுட்டாரு! சரி அப்படி என்ன தான் பண்றாருன்னு, போயிட்டு வந்த ஒரு கோயிந்து கிட்ட கேட்டேன்.

உடனே, அவரு நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞவரு, கலியுக புத்தரு, மிகப்பெரிய சித்தரு, வெறுங்கையில விபூதி வரவைப்பாரு அப்படின்னாரு.

ஆஹா! ன்னு நம்ம தெரிஞவருகிட்ட்யிருந்த் இந்த வீடியோவை வாங்கி, கோயிந்து கிட்ட போடு காட்டினேன்! Computer Graphics வேலை இது! நான் நம்ப மாட்டேன்னுட்டாரு!

நீங்களே பார்த்து சொல்லுங்க, உண்மையை!



குறிப்பு: நான் கடவுள் மறுப்பாளன் அல்ல! ஆனால் கடவுள் பெயரால் செய்யும் மோசடிகளுக்கு ஆட்படுபவன் அல்ல!

Monday, December 25, 2006

வைகோ ஒரு சிறந்த தலைவரா?















சமீபத்தில், தமிழ்மணத்தில், இந்த பதிவை படித்தேன்

"வைகோவின் வீழ்ச்சியா? எழுச்சியா?"- தமிழச்சி
http://thamizhachi.blogspot.com/2006/12/blog-post_22.html

இவருக்கு நான் எழுதிய பதிலை, கீழே பதிவாக அளித்திருக்கிறேன்!

தமிழச்சி!
உங்களுடைய சிந்தனையும், செயலும் அப்படியே வைகோவைப்போல் இருக்கிறது!
அதாவது, சொல்லும் கருத்தில் ஆழமில்லாவிட்டலும், அதை கோர்வையாகவும், அழகாகவும் சொல்லுகிறீர்கள்!

தலைவனுக்குரிய முக்கியமான குணம், அனைவரின் ஆலோசனையும் கேட்டபின் சொந்த முடிவை எடுப்பதே ஆகும்! அதேபோல, தன்னைவிட அதிகமாக கழகத்தையும், கழகத்தைவிட அதிகமாக தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும்! பொறாமை படுதலோ, உணர்ச்சிவசப்படுதலோ கூடாது

இந்த குணங்கள் அனைத்துமே திரு.வைகோ அவர்களுக்கு குறைவுதான்!

உதாரணங்கள்:

1. நீங்களே சொன்னதுபோல், பிறருடய ஆலோசனைக்கிணங்கி, அதிமுகவுடன் கூட்டு வைத்தது( கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக கூறப்பட்டாலும், அதை இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம்!)ஒரு பொறுப்பான தலைவனின் செயல் தானா அது?

2. இந்திய நாட்டின் மக்களவை உறுப்பினராக(MP) இருக்கும்போதே, விசா இல்லாமல் கள்ளத்தனமாக ஈழம் சென்றது! குறைந்தபட்சம் கட்சித்தலைவருக்காவது சொல்லி இருக்கலாம். ஏன் சொல்லவில்லை? இவர் ஈழத்துக்கு போனதால் அங்கே அமைதி பூத்துவிட்டதா?

3.கட்சியின் கடைக்கோடி தொண்டன் கூட தலைவனாக ஆசைப்படலாம் தவறில்லை! ஆனால் அப்பதவிக்கு தகுந்தவனாக தன்னை உயர்த்திக்கோள்ள வேண்டுமே தவிர தலைவனைவிட தான் உயர்ந்தவன் என்று அடிக்கடி அறிவித்துக்கொண்டே இருக்கக்கூடாது! தலைமையின் வாரிசாக காட்டிக்கொண்டிருப்பவரை வெல்வதற்கு முக்கியம், சமயம் வரும்வரை கட்சியிலேயே இருப்பதுதான்! அதே போல பகைவனையும் நண்பனாக்கும் சாதுர்யம் வேண்டும்!அந்த சாமர்த்தியம் கூட இல்லாதவரை எப்படி தலைவராக ஏற்றுக்கோள்வது?

4.வைகோவினுடைய மிகப்பெரிய பலவீனம் அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதுதான்! "உணர்ச்சி இல்லாதவன் சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுக்கு வர மூடியாது என்றாலும், அதை கட்டுப்படுத்த தெரியாதவன் சிறந்த மனிதனாகவோ, தலைவனாகவோ வரமுடியாது"(சத்தியசோதனையில் மகாத்மா காந்தி சொன்னது)

என்ன, உண்மை சுடுகிறதா?

குறிப்பு: நான் எல்.ஜி. குழுவிற்கு வக்காலத்து வாங்கவில்லை! அவர்களின் பதவி வெறி பல்லிளிப்பு பார்ப்பதற்கே கேவலமாக இருக்கிறது!

Saturday, December 23, 2006

சென்னயில் சிவாஜி படப்பிடிப்பு!




















ஹைதரபாத், ஸ்பெயின், புனே என சுற்றித்திரிந்த "சிவாஜி" படப்பிடிப்பு குழுவினர் கடைசியாக நேற்று வந்து சேர்ந்த இடம், நம்ம சிங்காரச்சென்னை தான்!

அண்ணா சாலை மேம்பாலத்தில், நேற்று நள்ளிரவு ஆயிரக்கணக்கான கார்களை நிறுத்தி ட்ராபிக் ஜாம் ஆனதுபோல் செட்டப் செய்யப்பட்டது!

இன்று இரவும் இந்த படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Tuesday, November 21, 2006

நாணயம் தவறியது யார்?

தமிழ் தினசரிகளை படித்து வருபவர்கள் சமீபகாலமாக ஒரு விளம்பரத்தை பார்த்திருக்கலாம்.

அது, "நாணயம் தவறிய கடன்தாரர்கள்" என்ற தலைப்பில் State Bank of India வால் வெளியடப்பட்டது. அதில் கடன் வாங்கி பணம் கட்டத்தவறியவர்களின் பெயர், முகவரி, வாங்கிய மற்றும் பாக்கி தொகையுடன் புகைப்படமும் இருக்கும். இதை பார்த்தவுடன் நான் "சரி, நம் வங்கிகள் உஷாராகி விட்டன, இனிமேல் யாரும் வங்கிகளை யாரும் ஏமாற்றி தப்பிவிட முடியாது" என நினைத்தேன்.

ஆனால், அவற்றை உற்று பார்த்த பிறகு தான் இந்த வங்கியின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. இதில உள்ளவர்கள் யாரும் லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ, மோசடி செய்தவர்களும் இல்லை. ஊரை விட்டு ஓடுபவர்களும் இல்லை(ஏனென்றால், இவர்கள் வாங்கிய தொகை அப்படி) !

அரசு மற்றும் தனியார் துறை கடைநிலை ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்சுகள், மற்றும் சிறிய சுயதொழிலில் ஈடுபட்டுள்ளோரே இந்த listல் உள்ளனர். ஏதோ அவசரத்திற்காக வங்கியில் பர்சனல் லோன் எடுத்து, முக்கால்வாசிக்குமேல் கட்டியபின் நிலைமை சரியில்லாமல் தவறிய்து போல்தான் எனக்கு தெரிந்தது.

இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனையா? அதுவும் விசாரணையே இல்லாமல்? கொடுத்த கடனை வசூலிக்க எவ்வளவோ வழிகள் இருக்கும் பொழுது இவ்வளவு பாரம்பரியமுள்ள வங்கி இப்படி செய்யலாமா? ஈட்டிக்காரன் போல் சத்தம் போடுவது அழகா?

சரி, இப்படி கடனை திருப்பி கட்டாதவர்கள் மேலெல்லாம் நடவடிக்கை எடுக்க துணிச்சல் இருக்கிறதா இவர்களுக்கு? MLA, MP, மந்திரி, IAS, சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் என கடன் தவறியவர்கள் பட்டியல் மைல் கணக்கில் நீளுமே, அவர்கள் படத்தை இப்படி போடும் தைரியம் உண்டா இவர்களிடம்?

இப்படி ஒரு கேவலமான விளம்ரத்தை காசுக்காக பிரசுரம் செய்யும் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு அறிவே இல்லையா?

தமிழ்நாடு தவிர வேறெந்த மாநிலத்திலேயும் இப்படி ஒன்று நடந்திருந்தால், அந்த வங்கி அங்கே தொழில் செய்ய முடியுமா?

மானமுள்ள தமிழர்களே! சற்று சிந்திப்பீர்!

குறிப்பு: எனக்கு எந்த வங்கியிலேயும் கடன் இல்லை!

Sunday, August 27, 2006

சென்னை பிரியாணி!

மெரினா, கண்ண்கி சிலை, lic building, இப்படி பல சிறப்பு விஷயங்கள் இருந்தாலும், யாருமே பேசாத சிறப்பு சென்னையோட பிரியாணி தான்.

புதுசா இருக்கா? மேல படிங்க!

ஹைதராபாத் பிரியாணி, தலப்பாகட்டு பிரியானி, ஆம்பூர் பிரியாணி, மொகல் பிரியாணி, செட்டிநாட்டு பிரியாணி, இப்படி பலவிதமான பிரியாணிகள் இருக்கு. அத்தனை வகையான பிரியாணியும் கிடைக்கக்கூடிய ஒரே ஊர் நம்ம சென்னை தான்.

காலை 7 மணியிலிருந்து நடு ராத்திரி வரைக்கும் சூடாக பிரியாணி போடும் கடைகளை முற்றுகயிடுகிறார்கள் சென்னைவாசிகள். 10 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரைக்கும் விதவிதமான பிரியாணி சாப்பிடுகிறார்கள் இவர்கள்(425/- + tax கொடுத்து ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்களை சேர்த்து கொள்ள மாட்டேன்).

ஆடு,மாடு,கோழி, காடை, வான்கோழி, முயல், மீன், இறால் என எந்த ஜீவராசிகளையும் விட்டுவைப்பதில்லை(எதையாவது மறந்திருந்தா சொல்லுஙக).


ரெட்ஹில்ஸ் முதல் தாம்பரம் வரைக்கும் ஒவ்வொரு ஏரியாவிலும் சக்கை போடு போடுகிறார்கள் இவர்கள். இந்த ஏரியா மொத்தமும் இல்லையென்றாலும் முக்கால்வாசி இடத்தில் சாப்பிட்டவன் நான். அதற்காக, பிரியாணி சாப்பிடத்தான் இந்த இடமெல்லாம் போனேன் என்று நினைக்காதீர்கள். என் தொழில் அப்படி.

ஒவ்வொரு ஊரிலும், சிறந்த இடம் எதுவென்று பட்டியலே போட்டு வைத்திருக்கிறேன்.


அது அடுத்த பதிவில்!

வேட்டையாடு விளையாடு - என் பார்வை

எல்லாருக்கும் வணக்கம்!

பல தடைகளை தாண்டி திரைக்கு வந்திருக்கும் வே.வி பார்த்தேன்.

நிற்க.நான் ஒரு சினிமா விமர்சகனோ, சினிமாக்காரனோ இல்லை. அதனால், ஓசியிலோ சிடியிலோ பார்க்காமல், 100 ரூபாய் கொடுத்து தியேட்டரில் தான் பார்த்தேன்.

பொதுவாக, நம்ம சினிமாவுல ரெண்டு விதமான போலீசை தான் காட்டுவாங்க. 1. நேர்மையான, எதுக்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகிற போலிஸ், 2.லஞசம் வாங்குகிற ரவுடி போலிஸ்.

இந்த மாதிரியான போலித்தனம் எதுவுமில்லாமல் நிஜமான போலீஸ் வாழ்க்கையை காண்பிக்கும் படம் தான் வே.வி.

குருதிப்புனல், காக்க காக்க இவ்விரண்டு படங்களோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும் கூட இது போன்ற ஒரு Crime Thriller , இது போன்ற styleல் தமிழில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

DCP(crime) Raghavan IPS ஆக கமல். டிஜிட்டல் கேமரா, MotoRazr செல் போன், லேப்டாப் என ஹை-டெக் சமாச்சாரங்களை உப்யோகப்படுத்தினாலும், போலீசுக்கே உரிய உள்ளுணர்வயும், வாரண்ட் இல்லாமல் உள்ளே நுழைந்து ஆளை தூக்க நினைக்கும் அதிரடி இபிஎஸ்.

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம் 'சகலகலா வல்லவன்' . அன்றிலிருந்து இன்று வரை அதே ஆச்சரியத்தோடு நான் அவரை பார்க்கிறேன். ஐம்பது வயது கடந்த பின்னும் சண்டைகாட்சிகளில் மிரட்டுகிறார்.

மனைவி சாவுக்கு, அவர் உணர்ச்சிகளை அள்ளி கொட்டாமல், 'துக்கம் தொண்டையை அடைக்கிறது என்று சொல்வோமே, அந்த உணர்வை ஒரே ஒர் வினாடியில் காண்பித்து விடுகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு, கமல் ரசிகர்களுக்கு ஒரு ஆக்க்ஷன் விருந்து.

ஆங்கில படங்அளுக்கு இணையான தொழில்நுட்ப நேர்த்தி, திரைக்கதை இருந்தும் படத்தின் மைனஸ், இயக்குநரின் 'காக்க காக்க' Hangover தெரிவது தான். அதை தவிர்த்திருக்கலாம்.
ஹீரோயினை உயிரோடு விட்டு வைப்பதா, இல்லையா என கடைசி வரை முடிவெடுக்கவில்லையென நினைக்கிறேன். கடைசி காட்சி, படத்தோடு ஓட்டவில்லை. கமல் ரசிகர்களை திருப்திப்படுத்தவாவது ஒரு Solo song வைத்திருக்கலாம்.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனால், நிச்சயம் கைகொட்டி ரசிக்கலாம்!

முதல் வணக்கம்


எல்லாருக்கும் வணக்கம்!

இந்த வலை உலகத்துக்கு நான் புதுசு!

இந்த blogக்கு ரோடரம்னு பேர் வச்சதுக்கு specialஆ எந்த காரணமும் இல்லை!

கேரளா போயிருந்தப்ப சோடடானிக்கரை பக்கத்துல பார்த்த ஓரு டீ கடையோட பேர் தான் இது. நல்லா இருந்தது( கடையும், டீயும், பேரும்)

எத்தனையோ ஊரு போயிருப்போம், எத்தனையோ இடங்களை, கடைகளை, ம்னிதர்களை பார்த்திருப்போம். ஆனால், சில பெயர்கள் தான் நம்ம ஞாபகத்துல இருக்கும். அது போல நான் பார்த்த, ஞாபகத்துல இருக்கிற விஷயங்களை உங்களோட பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

படிச்சிட்டு உங்களோட கருத்தை சொல்லுங்க!

நன்றி!